வார ராசி பலன்: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. பொறுமை காப்பது வெற்றியை தரும்!

Subscribe to Oneindia Tamil

Rishabam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-will-rishabam-taurus-rasi-people-get-from-may-11-to-18

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறந்க்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)

ரிஷப ராசியினருக்கு அரசு தொடர்பான விஷயங்களில் சஞ்சலம் ஏற்படும். இழுபறியாக இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். அனுமன் சாலிஷா கேட்பது நன்மையைத் தரும். தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும்.

கவனம்

ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத குடைச்சல், வேலை அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் விசித்திரமான டாக்ஸிக் மன நிலையில் இருப்பார்கள். அதனால், அதீத மன உளைச்சல் ஏற்படும். வேலையை உடனடியாக முடிக்க வேண்டும் என்பது போன்ற அழுத்தம் ஏற்படும்.

ஆரோக்கியம்

அடிக்கடி தலைவலி, கண் வலி, கண் சிவத்தல், தொண்டை உபாதைகள், நாக்கில் புண் வருவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. காசு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. கணவன், மனைவி வெளியூர் செல்வது, தூரமாக செல்வது போன்றவை ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம், ரத்த அழுத்தம் குறைவது போன்றவற்றில் கவனம் தேவை.

வழிபாடு

நண்பர்களால் நிறைய நன்மைகள் நடக்கும். பெரிய சந்தோஷம் ஏற்றம் ஏற்படும். திருச்செந்தூர் முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அரசாங்கம், அரசியல், திருமணம் போன்றவற்றை இந்த காலகட்டத்தில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். நண்பர்கள் வரவு இருக்கும். அவர்களால் சந்தோஷம் ஏற்படும்.

மதிப்பெண்

மென்டல் டென்ஷன் அதிகரிக்கும். தலைவலி போன்றவை இருக்கும். அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்புகள் இல்லாமல் இருப்பது நன்மையைத் தரும். தேவையற்ற பதட்டம் குறையும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+