திருமண ஆசை கூறி ஏமாற்றப்படும் பெண்களை பாதுகாக்க விரைவில் புதிய சட்டம்
சென்னை:
திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க புதியசட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் காவல்துறை நிர்வாகம் குறித்த ஒட்டுமொத்த ஆய்வை அவர் மேற்கொண்டார். மூத்த காவல்துறைஅதிகாரிகள் பங்கேற்ற க் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்விவரம்:
* சென்னை, கோவையில் இருப்பதைப் போல மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில்விரைவில் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பெண்கள் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும்.
* பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோருக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே,அப்படிப்பட்டவர்கள் தப்பித்து விடாமல் தீவிர விசாரணை நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில்மகளிர் காவலர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதகற்காக மாநிலத்தின் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கும் சிறப்பு புலனாய்வுப் பயிற்சி அளிக்கப்படும்.
*திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு பின்னர் பெண்களை ஏமாற்றும் மோசடி நபர்களைத் தண்டிக்க புதியசட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
* நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை எதிர்கொள்ள காவல்துறைக்குப் புதிதாக 80 ரோந்து வாகனங்கள்வழங்கப்படும். இந்த வாகனங்களில் ரூ. 4 கோடி செலவில் ரேடார் கன், மூச்சுத்
திணறலை சரி செய்யும் ஆக்சிஜன் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை இருக்கும். முக்கிய நெடுஞ்சாலைகளில்இந்த முதலுதவி ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
* வாகனங்களை அதி வேகமாக ஓட்டி, சாலையில் செல்வோரை விபத்துக்குள்ளாக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சரி பார்த்து மீண்டும்வழங்கும் முறையைக் கொண்டு வர வேண்டும். தாறுமாறாக வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
* குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பித்து விடாமல் இருக்க அவர்களை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஜிபி கோவிந்த், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி வெங்கடகிருஷ்ணன், புலனாய்வுபிரிவு கூடுதல் டிஜிபி நடராஜன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஜயக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications