முதல் சம்பளத்திற்காக காத்திருக்கும் தற்காலிக அரசு ஊழியர்கள்
சென்னை:
தமிழ்நாடு முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 15,000 தற்காலிகஊழியர்களுக்கு வருகிற 31ம் தேதி, முதல் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால் அவர்கள் அனைவரும் மிகுந்த பரவசத்துடன் காத்துள்ளனர்.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டதால் தமிழகம் முழுவதிலும் 2லட்சம்பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தற்காலிக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு1000 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். மொத்தம் 15,000 தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் வருகிற 31ம் தேதி, முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் மிகுந்தபரவசத்துடன் காத்துள்ளனர்.
இந்த வேலை நிரந்தரமாகுமா, அல்லது எப்போது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்ற பயம், குழப்பம் ஒரு பக்கம்இருந்தாலும் முதல் முறையாக அரசு சம்பளம் வாங்கப் போகும் சந்தோஷம், பரவசம் அவர்களிடையேஇருக்கத்தான் செய்கிறது.
ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும்போதெல்லாம், 31ம் தேதி சம்பளமாமே என்று புன்னகையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
சிலருக்கு பாதிச்சம்பளமே கிடைக்கும் நிலை உள்ளது. காரணம், பாதி நாளில்தான் அவர்கள் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
இருப்பினும் எவ்வளவு கிடைத்தாலும் பரவாயில்லை. நிம்மதியாக வேலை பார்க்கும் சூழ்நிலையை அரசுஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதற்காக எந்தத் தியாகத்தை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறுகிறார்கள் அந்த தற்காலிக ஊழியர்கள்.
இதற்கு முன்பு வேலை பார்த்து வந்த தனியார் வேலையை விட இது எவ்வளவோ நிம்மதியாகவும், திருப்தியாகவும்உள்ளதாக பல ஊழியர்கள் கூறுகிறார்கள்.
சம்பளத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நிச்சயம் முன்பு பார்த்து வந்த தனியார் வேலையை விட இங்குஅதிக சம்பளம்தான் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் சந்தோஷத்துடன் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் முதல் சம்பளத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர் இந்த தற்காலிக ஊழியர்கள். இவர்களுக்குமாதத்திற்கு ரூ. 4500 தொகுப்பூதியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பளம் விரைவில் ரூ. 6000 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications