நாகர்கோவிலில் அதிமுக-பா.ஜ.க. தொண்டர்கள் அடிதடி: நகரில் பதற்றம்
நாகர்கோவில்:
| நாகர்கோவிலில் அதிமுக- பா.ஜ.கவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மத்திய பா.ஜ.க. அமைச்சர்,அதிமுக எம்.எல்.ஏவின் முன்னிலையில் அவர்களது ஆதரவாளர்கள் அடித்துக் கொண்டு உருண்டனர்.பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் உள்ள ராமசாமி அய்யர் பூங்கா சமீபத்தில் ரூ. 45 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. |
இந்தப் புதிய பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. இதையடுத்து மத்திய அமைச்சரின் தொகுதிமேம்பாட்டு நிதியில் நீருற்று, கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது.
| அதே போல எம்.எல்.ஏ. ஆஸ்டினின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் பூங்கா நுழைவாயில் வைக்கப்பட்டதாக இன்னொருகல்வெட்டும் வைக்கப்பட்டது.
இந்தப் பூங்காவின் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் தளவாய் சுந்தரம்,எம்.எல்.ஏ. ஆஸ்டின், கலெக்டர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்க இருந்தனர். |
இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. ஆஸ்டினின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திடீரென மாயமானது. யாரோஅதை பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தனர். இதை பா.ஜ.கவினர் தான் செய்திருக்க வேண்டும் என அதிமுகவினர்குற்றம் சாட்டினர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. இன்னொரு கல்வெட்டைத் தயார் செய்து கொண்டு வந்து வைத்தார். அந்தக் கல்வெட்டசுவரில் பதிக்க அதிமுக முயன்றபோது அதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எங்க அமைச்சர் தான் நிறைய பணம் ஒதுக்கினார், ஆனால், வெறும் 3 லட்சத்தை தந்துவிட்டு கல்வெட்டு கேக்குதாஎன பா.ஜ.கவினர் கேட்க, சூடாகிப் போன அதிமுகவினர் அவர்களை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து இருகட்சிகளின் தொண்டர்களும் அங்கு குவிந்து ஒருவருக்கு எதிராக ஒருவர் கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அதிமுகவினருக்கு எதிராக பா.ஜ.கவினர் சாலை மறியல் செய்ய,போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பா.ஜ.கவினரை தூக்கி சாலையோரத்தில்எறிந்தனர்.
இதையடுத்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார். எம்.எல்.ஏ. ஆஸ்டினும் அங்கு வந்தார்.
இந் நிலையில் பா.ஜ.கவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஆரம்பித்தது. இரு தரப்பினரும்ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
| இதில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு முகம்உடைந்து ரத்தம் கொட்டியது.
தங்கள் கட்சியினர் அடித்துக் கொள்வதை ராதாகிருஷ்ணனும் ஆஸ்டினும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுநின்றனர். |
பூங்காவை மூடிவிட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆஸ்டினுடன் கலெக்டர்தனித்தனியே பேச்சு நடத்தினார்.
கல்வெட்டை வைக்க விடாவிட்டால் பூங்காவைத் திறக்க விட மாட்டேன் என எம்.எல்.ஏ. கூறினார்.
ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோ, அதிமுகவினர் தில்லுமுல்லு செய்கின்றனர். இரண்டு பேர் சேர்ந்து எப்படிநுழைவு வாயிலுக்கு நிதி ஒதுக்க முடியும். அது என் நிதியில் கட்டப்பட்டது. இதனால் நுழைவு வாயிலில் ஆஸ்டினின்கல்வெட்டை வைக்க விட மாட்டேன் என்றார்.
குழப்பிப் போன கலெக்டர் இரு கல்வெட்டுக்களையும் எடுத்துவிட்டு பூங்காவைத் திறக்கப் போவதாகஅறிவித்தார். அதன்படியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூங்கா திறக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!















Click it and Unblock the Notifications