6,072 அரசு ஊழியர்கள் மீதான வழக்கு: 3 நீதிபதிகள் கமிட்டி அமைப்பு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காவல் துறையினரால் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு மீண்டும் பணி வழங்கலாமா என்பது குறித்து விசாரிக்க 3ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஓய்வு பெற்ற நீதிபதிகளான மலைசுப்பிரமணியம், சம்பத், தங்கவேல்ஆகியோரைக் கொண்ட விசாரணைக் கமிட்டியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஇன்று அமைத்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களில் சுமார் 8,000 பேருக்கு வேலை வழங்கவும், எப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்ட மற்ற 6,072 பேர் மீதான வழக்குகளை 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கமிட்டியைக் கொண்டுவிசாரிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகளை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு தலா ரூ. 50,000 ஊதியம் வழங்கவேண்டும் எனவும், இந்த நீதிபதிகள் கமிட்டி ஒரு மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேரை இந்த கமிட்டிக்கு நியமிக்குமாறு தலைமை நீதிபதிக்கு தமிழக அரசுகோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த 3 நீதிபதிகளின் பெயர்களையும் தலைமை நீதிபதி இன்றுஅறிவித்தார்.
இக் குழு ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கையை தாக்கல் செய்யும். மூன்றுநீதிபதிகளும் தலா 2,000 வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில்தான் 6,072 ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா, இல்லையா என்பது முடிவாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications