தேர்தல் நிதி திரட்டலை முடக்க முயற்சி: திமுக புகார்
சென்னை:
வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க நிதி திரட்டும் முயற்சிகளை திமுக தலைவர் கருணாநிதிதீவிரப்படுத்தியுள்ளார். இந் நிலையில் தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 1 கோடி நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திரட்டப்படும் நிதியை தவணை முறையில் அறிவாலயத்தில் திமுகவினர் ஒப்படைத்து வருகின்றனர்.
மாஜி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சிப் பதவியை வைத்து வாழ்ந்தவர்கள், திமுக ஆட்சியில் லாபம் அடித்த காண்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள ஆகியோரிடம் இந்த நிதி திரப்படுகிறது.
கடைக்காரர்கள, பொது மக்களிடமும் நிதி திரட்டி வருகின்றனர் திமுகவினர். பல இடங்களில் கடைக்காரர்களைமிரட்டி நிதி கேட்பதாகவும் திமுகவினர் மீது புகார்கள் எழுந்துள்ளன. சென்னை தாம்பரத்தில் பால் பண்ணை ஒன்றில்நிதி திரட்டச் சென்ற திமுகவினருக்கும் பால் பண்ணை ஊழியர் சந்திரமோகன் என்பவருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது.
இதையடுத்து சந்திரமோகனை திமுகவைச் சேர்ந்த குறிஞ்சி சிவா என்பவர் தாக்கியுள்ளார். இதையடுத்து சிவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், திமுக ஆட்சியில் இருந்தபோது நன்றாக அனுபவித்த திமுக தலைவர்கள் பலர் இப்போது நிதிதிரட்டும் விஷயத்தில் ஒதுங்கி வருவதாக அறிவாயலத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தேர்தல் நிதி திரட்டலை தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்கருணாநிதி.
சனிக்கிழமை தஞ்சாவூரில் தனது சுற்றுப் பயணத்தை கருணாநிதி தொடங்குகிறார். தஞ்சையைத் தொடர்ந்து திருச்சி,சென்னை, திருநெல்வேலி, பரமகுடி, மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், சேலம் ஆகிய நகர்களுக்கு கருணாநிதிசெல்கிறார்.
கருணாநிதியின் வருகையை ஒட்டி நிதி திரட்டும் வேலையை முடுக்கிவிட்டுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகிகள்சிறப்புப் பொதுக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இவற்றில் கருணாநிதி பங்கேற்கிறார். அப்போதுமேடையில் வைத்தே கருணாநிதியிடம் நிதி வழங்கப்படும்.
இதற்கிடையே ஜவுளி தொழிற்சாலைகள் நிறைந்த ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தேர்தல் நிதி திரட்டுவதில் அதிக முனைப்பு காட்டி வந்ததாகத் தெரிகிறது. ஜவுளி அதிபர்களிடம் அவர்அதிகமான நிதி திரட்டிய நிலையில் தான் அவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரை விட்டு ரெய்ட்நடத்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா மீது திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications