For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்கிறது மேட்டூர் அணை நீர் மட்டம்: 2 ஆண்டுகளுக்கு பின் தஞ்சையில் மீண்டும் சம்பா சாகுபடி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தஞ்சை, திருவாரூர் மாவட்ட நெல் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் ஓரு நாட்களில்திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படவில்லை.

இதனால் சொல்லொண்ணா துயரில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்ட விவசாயிகள் இந்தநிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்கப்படுமா என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

கர்நாடகத்தில் இருந்து நீர் வராவிட்டாலும் கூட மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் அவ்வப்போதுபெய்த மழை நீரை அரசு சேமித்து வைத்து வந்தது. நேற்று 70 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று ஒரு அடிஅதிகரித்து பிற்பகல் 12 மணி நிலவரப்படி 71.46 அடி ஆக உயர்ந்துள்ளது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 9,052 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

வழக்கமாக 60 அடிக்கு தண்ணீர் இருந்தால் அணை திறக்கப்படும். தற்போது 71 அடி நீர் இருப்பு உள்ளதாலும்,தொடர்ந்து நிலையாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், ஓரிரு நாட்களில் நெல் பாசனத்திற்காக காவிரியில் நீர்திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு சம்பா சாகுபடியைசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போதுள்ளநீரைத் திறந்து விட்டால் 20 நாட்களில் அணை காலியாகி விடும் என்ற கவலை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிலவுவதால் அணை எப்போது திறக்கப்படும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X