For Daily Alerts
Just In
வட கிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கும்
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், தென் மேற்கு பருவ மழைமுடியும் தருவாயை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை முடிவடைவதையொட்டி இன்னும் சில தினங்களில் வட கிழக்குப் பருவ மழைதொடங்கி விடும். கடந்த ஆண்டை விட அதிக அளவில் வட கிழக்குப் பருவ மழை இருக்கும்.
கடலோர மாவட்டங்களில் கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வழக்கமான மழைகாணப்படும் என்றார்.
Comments
Story first published: Friday, October 8, 2004, 5:30 [IST]