வட சென்னையில் தீவிரமடையும் காலரா!
சென்னை:
சென்னை மாநகரின் வட பகுதியில் காலரா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையைத் தொடர்ந்து காலரா பரவி வருகிறது.
இதனால் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள்வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர்.
வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பாடி, திருவொற்றியூர், போரூர், நெற்குன்றம், கொரட்டூர்ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் காலரா பரவியுள்ளது.
அதிகரிக்கும் காலரா நோயாளிகளால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் இடமின்மைப் பிரச்சினைஏற்பட்டுள்ளது.
சென்னை தவிர செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய வெளியூர்களிலிருந்தும் ஏராளமான காலரா நோயாளிகள்இங்கு வந்தவண்ணம் இருப்பதால் தண்டையார்பேட்டை மருத்துவனை நோயாளிகள் கூட்டத்தால் திணறிவருகிறது.
காலராவுக்கு இதுவரை ஒரு பெண் பலியாகியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதே காலரா பாதிப்பு அதிகரித்ததற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications