தனுஷ்கோடி அருகே புதிய தீவு
ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி அருகே கடலில் புதிதாக ஒரு தீவு உருவாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் தீவாக இருந்தது.ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். கோயில்கள், சர்ச்சுகள் என சகலமும் அங்கு இருந்தது.
40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வீசிய பெரும் புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்து போனது, ஆயிரக்கணக்கானமக்கள் மாண்டனர். ஊரே அழிந்து அதில் மிஞ்சிய பகுதிகள் ராமேஸ்வரம் நிலப்பரப்புடன் இணைந்தது. இப்போதுதனுஷ்கோடி இருந்த இடத்தில் வெறும் மண் பரப்புதான் காணப்படுகிறது.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியைச் சுற்றிலும் குருசடைத் தீவு, நல்லதண்ணீர் தீவு, முயல் தீவு என 20க்கும்மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந் நிலையில் புதிதாக ஒரு தீவு அப்பகுதியில் உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.
பெரிய மண் மேடாக அந்தத் தீவு தற்போது காணப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த மணல் மேடு,பெரும் தீவாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications