நாளை ஹைதராபாத்தில் நரசிம்ம ராவ் இறுதி சடங்கு
டெல்லி & சென்னை:
நாளை நடைபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் இறுதிச் சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நேற்று மதியம் ராவ் இறந்தார். அவரது மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 7 நாட்கள் துக்கம்அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து ராவின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மன்மோகன் சிங், சோனியா காந்தி, முன்னாள்பிரதமர்கள் வாஜ்பாய், சந்திரசேகர்,
பாஜக தலைவர் அத்வானி, திமுக சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சார்பில் அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள்அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல்,ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கிருந்தனர்.
நரசிம்ம ராவின் உடல் அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழக தலைவர்கள் அஞ்சலி:
மறைவுக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராவ் மறைவு குறித்து பர்னாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பன்முகம் கொண்ட மனிதராக ராவ் விளங்கினார். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த நரசிம்மராவ் எளிமையான மனிதர்.ஏழ்மை, வறுமையை ஒழிக்க பாடுபட்டவர். நாட்டை மிகச் சிறந்த முறையில் அவர் வழி நடத்திச் சென்றார். அவரது மறைவு நாட்டுக்குபேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட திறமையான ஒரு தலைவரை நாடுஇழந்துள்ளது. அவரது சேவை நாட்டுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர் மரணமடைந்துள்ளது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications