காஞ்சி மடம் வழிபாட்டு தலமே: நிர்வாகிகள்
கலவை:
காஞ்சி மடம் ஒரு கோயிலோ, புனிதமான இடமோ அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மடத்தின் நிர்வாகிகள் மறுப்புதெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கர மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 12ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் காஞ்சி மடத்தில் வழக்கமாக நடைபெறும்பூஜைகளுக்கு எந்தத் தடையும் வராது, சங்கராச்சாரியார்கள் இல்லாத காலங்களிலும் பூஜைகள் நடந்துள்ளன என்று கூறியிருந்தார்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி முதல்வரின் கருத்துக்கு மாறாக, காஞ்சி மடம் வழிபாட்டுக்குரிய இடமல்ல என்றுதமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து விஜயேந்திரர் கைது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைநடத்தத் தடை விதிக்கப்பட்டது.
மடத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவரது சீடர்களின் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. 1,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட விநாயகர்சிலையும் மடத்தில் உள்ளது. அதற்கும் பூஜை நடத்தப்படுகிறது. இதுதவிர பல்வேறு மன்னர்கள் வழங்கிய நெய் விளக்குகள் எந்ததடையுமின்றி தொடர்ந்து எரிய வேண்டும்.
இந்தப் பணிகள் தடையின்றி நடைபெற, மறைந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி தலைமையில் ஒரு குழுவை மறைந்த சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் அமைத்தார். அதன்படி இப்போதும் இந்தப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.
மடத்தில் இருக்கும் கிரானைட் கற்கள் 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது என்று இந்திய தொல்லியல் துறைஉறுதிப்படுத்தியுள்ளது.
சங்கராச்சாரியார்கள் எங்கு தங்கினாலும், சந்திரமெளலீஸ்வரருக்கும் அவரது துணைவி திரிபுர சுந்திரிக்கும் தவறாமல் பூஜைகள்நடைபெற்று வந்தன. ஜெயேந்திரர் சிறையில் இருந்து விடுதலையாகி கலவையில் தங்கியிருக்கும் காலம் முதல் இந்த நடைமுறையைத்தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.
காஞ்சி மடம் வழிபாட்டுக்குரிய இடமல்ல என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், மதத் தலைவர் பம்பான் சுவாமிகளின் சமாதியைவழிபாட்டுக்குரிய இடமாக இந்து அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. போகர் என்ற துறவியின்சமாதியின்மேல்தான் பழனி முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் சமாதி இங்கு இருப்பதால் இதுவும் வழிபாட்டுக்குரிய இடம்தான். எல்லவாற்றுக்கும்மேலாக ஜெயலலிதாவே இங்கு இருமுறை வழிபாடு நடத்தியுள்ளார் என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications