For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரராமன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த வழக்குவிசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட அன்றே உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,சங்கரராமன் கொலை வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் எனக்கு நீதி கிடைக்காது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்குமாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சி.லகோத்தி மற்றும் ஜி.பி.மாதுர்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X