For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நர்சரிப் பள்ளிகளில் தமிழுக்கு முதலிடம்: காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நர்சரிப் பள்ளிகள் எனப்படும் மழலையர் பள்ளிகளில் தமிழுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.

சென்னை அருகே அம்பத்தூரில் செயின்ட் ஜான்ஸ் நர்சரிப் பள்ளியை காளிமுத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தப் பள்ளி எல்லாத்தகுதிகளும் பெற்று, முறையாக அங்கீகாரமும் பெற்று திறக்கப்பட்டுள்ளது.

முறையான வசதிகள் இல்லாமலும், கட்டடங்கள் இல்லாததாலும்தான் பல்வேறு பிரச்சினைகள், விபத்துக்கள் நடக்க ஏதுவாகின்றன. அப்படி இல்லாமல் மாணவர்களின்பாதுகாப்பு, நலன்களை கருத்தில் காண்டு பள்ளிகள் செயல்படவேண்டும்.

நர்சரிப் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். அம்மா, அப்பா என்று அழைப்பதற்குப் பதில் மம்மி, டாடிஎன்றுதான் பல குழந்தைகள் இன்று அழைக்கின்றன. ஆனால் உள்ளத்துஉணர்வுகளை தமிழில்தான், தாய் மொழியில்தான் வெளிப்படுத்த முடியும் என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X