நுழைவுத் தேர்வு: வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்களுக்கு பாமக வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 12ம் தேதி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று பாமகவேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நுழைவுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்புமாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளும்இதை வரவேற்றன.

இந்த மகிழ்ச்சி 20 நாட்கள் கூட நிலைக்கவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம்ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் இந்த உத்தரவால் மிகுந்தமனவேதனை அடைந்துள்ளனர்.

எனவே மாணவ, மாணவிகள், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க நுழைவுத் தேர்வு ரத்தை உறுதி செய்திட உரியசட்டரீதியான பாதுகாப்பு நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வலியுறுத்தி வருகிற 12ம் தேதி ஒரு நாள்மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+