நடுக்கடலில் தத்தளித்த 10 இலங்கை அகதிகள்: கடற்படை மீட்டது
ராமேஸ்வரம்:
ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு நடுக் கடலில் உள்ள தீவில் இறக்கி விடப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த 12 இலங்கை தமிழ்அகதிகளை கடற்படையினர் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் உஷாந்தன் என்பவர் தங்கியிருந்தார். இவரது சகோதரிஇலங்கையில் இருந்தார். இலங்கையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாலும், அங்குபதற்றமான நிலை நிலவுவதாலும், தனது சகோதரியையும் மேலும் சில குடும்பத்தினரையும் தமிழகத்திற்கே அழைத்து வர முடிவுசெய்தார் உஷாந்தன்.அவரும், மேலும் 5 பெண்கள் உள்ளிட்ட 11 அகதிகளும் சேர்ந்து இதற்காக ராமேஸ்வரம் வந்தனர். அங்குள்ள ஏஜென்டுகள்சிலரிடம் தலா ரூ. 3,000 கொடுத்து கள்ளப் படகுகள் மூலம் தங்களை இலங்கையில் இறக்கி விட்டு விடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஏஜென்டுகளும் பணத்தை வாங்கிக் கொண்டு 18ம் தேதி இரவு 7 மணியளவில் 12 பேரையும் படகில் ஏற்றிக் கொண்டுகடலுக்குள் சென்றனர். நள்ளிரவைத் தாண்டியதும் படகை ஒரு தீவில் கொண்டு வந்து நிறுத்தி இதுதான் இலங்கை என்று கூறி 12பேரையும் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
ஆனால் தாங்கள் இறங்கியது இலங்கை அல்ல, நடுக் கடலில் உள்ள தீவு என்பது சிறிது நேரத்திலேயே அகதிகளுக்குத் தெரிந்துவிட்டது. இதையடுத்து ஏதாவது படகு வந்தால் அதில் ஏறி மீண்டும் ராமேஸ்வரமே சென்று விடலாம் என அவர்கள்காத்திருந்தனர்.
ஆனால் ஒரு படகும் வரவில்லை. இந் நிலையில் அந்தக் குழுவில் இருந்த 5 பெண்கள் பசியில் மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து பிரபாகரன் மற்றும் உஷாந்தன் ஆகிய இருவரும் தனுஷ்கோடிக்கு நீந்தி சென்று கடற்படையினர் உதவியை நாடலாம்என முடிவு செய்து நீந்தத் தொடங்கினர்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இருவரும் தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர். அங்குள்ள கடற்படையினரிடம் விஷயத்தைக்கூறினர். இதையடுத்து பிரபாகரனை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்படையினர் மற்றும் போலீஸார் தீவுக்கு சென்றனர்.
ஆனால் அதற்குள் அப்பகுதியில் ரோந்து சென்ற ஒரு கடற்படை படகு அவர்களை மீட்டு மண்டபத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டது தெரியவந்தது. 12 பேரும் தற்போது மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications