பெங்களூர் ஐடிபிஎல்லுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ஐடிபிஎல் (சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியா) வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் பாதுகாவலருக்கு நேற்று மாலை ஒரு இ-மெயில் வந்தது.அதில் ஐடிபிஎல்லில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கிருந்த அனைத்து அடுக்கு மாடிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பல ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார், மோப்ப நாய்கள் சோதனையில்ஈடுபட்டனர். நேற்றிரவு முழுவதும் சோதனை நீடித்தது. ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications