பஞ். தலைவர் மீது குண்டு வீச்சு-அரிவாள் வெட்டு
சென்னை:சென்னை அருகே சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி,அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கலட்டிப் பேட்டையைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். திமுகவைச் சேர்ந்த இவர், குன்றத்தூர்அருகே உள்ள சிறுகளத்தூர் ஊராட்சித் தலைவராக உள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த 2வது கட்ட இலவச நில விநியோகத் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர்கருணாநிதி ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் சென்றார். இதையொட்டி அவரை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் திமுகவினர் வழியனுப்புவதற்குத் திரண்டனர்.
இதற்காக அரிகிருஷ்ணனும் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். வழியனுப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டுசொந்த ஊருக்கு காரில் திரும்பினார் அரிகிருஷ்ணன். குமார் என்பவர் காரை ஓட்டினார். அதில், அரிகிருஷ்ணன்தவிர 5 பேர் இருந்தனர்.
கார் பல்லாவரத்தை அடுத்த ஆண்டார்குப்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல்இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அரிகிருஷ்ணனின் காரை துரத்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த அரிகிருஷ்ணன், தன்னைத் தாக்கத்தான் அக்கும்பல் வருகிறது என்பதை அறிந்து காரைபின்னோக்கி எடுத்து வேறு பாதையில் செல்லக் கூறினார். இதையடுத்து குமாரும் காரை பின்னோக்கி எடுத்தார்.அப்போது, அரிகிருஷ்ணனின் காரை, பின்னால் துரத்தி வந்த கும்பலின் ஒரு கார் இடித்து நிறுத்தியது.
இருப்பினும் குமார் சுதாரித்துக் கொண்டு காரை எடுத்து வேகமாக ஓட்டத் தொடங்கினார். இதைப் பார்த்தமோட்டார் சைக்கிளில் இருந்த நபர்கள், கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர். இதனால்அரிகிருஷ்ணனின் கார் நிலை தடுமாறி ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இதையடுத்து அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் காரிலிருந்து இறங்கி ஓடினர். அவர்களை விடாமல் துரத்தியஅக்கும்பல் அரிகிருஷ்ணனை பிடித்து அரிவாளால் வெட்டியது. இதில் அரிகிருஷ்ணனின் முதுகில் பலத்த காயம்ஏற்பட்டது. ரத்தம் கொட்டத் தொடங்கியதால் மயக்கமடைந்த அரிகிருஷ்ணன் சாலையிலேயே விழுந்து விட்டார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். மக்கள் கூட்டம் கூடுவதைப் பார்த்தஅந்தக் கும்பல், கொலை முயற்சியைக் கைவிட்டு விட்டு தங்களது வாகனங்களில் ஏறித் தப்பினர்.
உடனடியாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து சம்பவஇடத்திலிருந்து மர்ம கும்பல் விட்டுச் சென்ற ஒரு கார், அரிவாள், 7 நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர பட்டாக்கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகமதன், பாபு, அசோக் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
மதனின் தாயார் ரஞ்சிதம். அதிமுகவைச் சேர்ந்த இவரது கணவர் பெயர் அன்பு. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்புவெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் வெளியே வந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறுகளத்தூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரஞ்சிதமும்,அரிகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இதில் அரிகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதனால் முன்விரோதம் முற்றியது. கொலை ஆபத்து இருப்பதால் எப்போதும் நான்கு, ஐந்து பேர் புடைசூழத்தான் அரிகிருஷ்ணன் எங்கும் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது.
இத்தகவல் பரவியதும், சிறுகளத்தூர் மற்றும் கலட்டிப்பேட்டை ஆகிய இடங்களில் பதட்டம் எழுந்தது.கலட்டிப்பேட்டையில் உள்ள ரஞ்சிதத்தின் தாயார் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் ஒரு மாடு இறந்தது. இருகிராமங்களிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications