பஞ்சாப்: வாக்குப் பதிவு தொடங்கியது
சண்டிகர்:பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பலத்த மழை மற்றும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 1.65 கோடி பேர் வாக்காளிக்க தகுதி பெற்றவர்கள். களத்தில் 1,038வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.
பஞ்சாபில் இப்போது முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தக் கட்சிக்கும் பாஜக-அகாலிதளம்கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாப் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் தலித்துகள் ஆவர். தனித்துப் போட்டியிடும்பகுஜன் சமாஜ் கட்சியால் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு பல தொகுதிகளில் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுடன் கூடவே அமிர்தசரஸ் எம்பி தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. கொலை வழக்கில் கைதானதால் மாஜி கிரிக்கெட்வீரரும் பாஜக எம்பியாகவும் இருந்த சித்து தனது பதவியை ராஜினாமா செய்ததால் இந்தத் தேர்தல் நடக்கிறது. இப்போது ஜாமீனில் உள்ள சித்துமீண்டும் போட்டியிடுகிறார்.
மழையால் ஒட்டுப்பதிவு மந்தம்:
கடந்த சில தினங்களாக பஞ்சாப்பில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்தது. இதனால் ஓட்டுப்பதிவில் விறுவிறுப்பு இல்லை. மாறாக மந்தமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது.ஓட்டுப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் மொத்தம் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.












Click it and Unblock the Notifications