நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு-தமிழகம் முடிவு
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர்கருணாநிதி தலைமையில் நடந்த தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி தீர்ப்பு குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது. அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடந்த இதில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், ஜோதி, பாமக சார்பில் ஜி.கே.மணி, மூர்த்தி, காங்கிரஸ் சார்பில்கிருஷ்ணசாமி, சுதர்சனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரதராஜன், ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட்சார்பில் தா.பாண்டியன், துரைமாணிக்கம், பாஜக சார்பில் இல.கணேசன், கண்ணன், மதிமுக சார்பில்ராதாகிருஷ்ணன், சத்யா (இந்த இருவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்)
போட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன்,கு.ப.கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் சார்பில் காதர் மொகிதீன், சையத் சத்தார்,
திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, அறிவுக்கரசு, எம்ஜிஆர் கழகம் சார்பில் ஆர்.எம்.வீரப்பன், ராஜ்குமார்,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜவாஹிருல்லா, ஹைசர் அலி, புதிய தமிழகம் சார்பில் டாக்டர்கிருஷ்ணசாமி,
உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் குமார்,அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன், இந்திய சமூக நீதி இயக்கம் சார்பில் எஸ்றா சற்குணம், காவிரிடெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் சாதக-பாதக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.பின்னர் தமிழகத்துக்கு பாதகமான விஷயங்களுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு தாவா சட்டத்தின் 5(3)வது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல்செய்யப்படவுள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்படும் முன் சட்ட, பாசன நிபுணர்களுடன் அரசு ஆலோசனைநடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications