வீடு கட்டி தருவதாக கோடி கோடியாய்மோசடி- புறம்போக்கு கண்டக்டர் கைது
சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி மோசடி செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் மதன் குமார் (52). இதையடுத்து ரியல்எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்க ஆரம்பித்தார்.
![]() |
இந் நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் வீடுகள் கட்டித் தருவதாகவும், நிலம் வாங்கித் தருவதாகவும் விளம்பரங்கள் செய்தார்.தனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலத்தில் 22 அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்தார்.
இதையடுத்து வீடுகளை புக் செய்ய இவரிடம் பலர் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் தந்தனர். ஆனால், வீடே கட்டித் தரவில்லை.
இதே போல இன்னொரு 3 கிரவுண்டு நிலத்தில் பிளாட்கள் கட்டித் தருவதாக விளம்பம் செய்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார். ஆனால்,அவர்களையும் ஏமாற்றினார்.
மேலும் பலருக்கு வீடுகளை தந்தாலும் அதை ரிஜிஸ்தர் செய்து தராமல் இருந்து வந்தார். காரணம், வீடு கட்டப்பட்ட இடம் மோசடியாகமதன்குமாரால் சுருட்டப்பட்டது என்பதே.
இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் மதன்குமாரை நெருக்க ஆரம்பிக்கவே ஆள் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து இவரிடம் ஏமாந்த 16பேர் மாநகர கமிஷ்னர் லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தனர்.
இதையடுத்து துணை கமிஷ்னர் தர்மராஜன் தலைமையில் தனி போலீஸ் படை மதன் குமாரை கைது செய்தது. அவரிடம் இருந்து பல கார்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
இவருக்கு சீதாகுமாரி, பெரியவதனா, மாலா என 3 மனைவிகளாம். முதல் மனைவி ஓடிப் போய்விட்டார். இரண்டாவது மனைவி விவாகரத்துவாங்கிச் சென்றுவிட்டார். 3வது மனைவி தி.நகர் பள்ளியொன்றில் ஆசிரியையாக உள்ளார்.
பொது மக்களிடம் இவர் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த மதன் குமார் இத்தனை நாட்களாக தனது அரசியல் செல்வாக்கை வைத்து தப்பி வந்தார். கண்டக்டராக பணியாற்றியபோதுஅண்ணா தொழிற்சங்கத்தில் மிகத் தீவிரமாக இருந்தார்.
அப்போதே அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டு வந்தார். டிஸ்மிஸ் ஆன பின் தான் வளைத்துப் போட்ட புறம்போக்கு நிலங்களையேமுதலீடாகக் கொண்டு ரியல் எஸ்டேட் பிஸினசில் இறங்கிவிட்டார்.
பல்லாவரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை சுருட்டுவதில் திமுகவைச் சேர்ந்த நந்து என்ற பிரமுகருக்கும் இவருக்கும் தான் கடும் போட்டியாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications