கடற்கரை மணலில் 'கடலை'; காதல் ஜோடிகளை விரட்டிய காக்கிகள்!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து சல்லாப, சந்தோஷங்களில் மூழ்கி கடல் மணலில் கடலை போட்டுக் கொண்டிருந்த ஜோடிகளை, போலீஸார் எச்சரித்து
விரட்டினர்.
மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவற்றில் சமீப காலமாக ஜோடி ஜோடியாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் அமைதியாக அமர்ந்து பேசாமல், வேறு சில சில்மிஷங்களில் பகிரங்கமாக ஈடுபடத் தொடங்கியதால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருவோர் முகம் சுளிக்கும் நிலை உருவானது.
மடியில் மாறி மாறி படுத்துக் கொள்வதும், சுற்றிலும் ஜனங்கள் இருக்கிறார்களே என்ற லஜ்ஜையே இல்லாமல் முத்தமிட்டுக் கொள்வதும், துப்பாட்டாவால் தங்களை மூடிக் கொண்டு உள்ளுக்குள் உராய்ந்து கொள்வதும், கட்டிப்பிடித்து விளையாடுவதும் என நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டியதை நாடே அறியும் வகையில் வெட்ட வெளிச்சமாக்கி வந்த ஜோடிகளால் கடற்கரை மணல்வெளி களேபரமாகிக் காணப்பட்டது.
இதற்கு முடிவு கட்ட காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து கடற்கரைக்கு வரும் ஜோடிகள், உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது, மடியில் படுப்பது என சில்மிஷங்களில் ஈடுபடக் கூடாது என போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
நேற்று நேரடியாக போலீஸார் களத்தில் இறங்கினர். கடற்கரைக்குச் சென்ற போலீஸ் குழு, கடற்கரை மணலில் தாறுமாறாகக் கிடந்த காதல் ஜோடிகளைப் பிடித்து கடுமையாக எச்சரித்தது. பின்னர் அவர்களின் செல்போன் எண்கள், முகவரிகளை பெற்றுக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பலர் ஜோடி ஜோடியாக வந்து போலீஸாரிடம் சிக்கினர். சில ஜோடிகள் கள்ளக் காதல் ஜோடி எனத் தெரிய வந்தது. இதில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் 45 வயதுக்கார ஆணும், 15 வயது மாணவியும் சிக்கினர். அந்த மாணவியை கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிய போலீஸார், அந்த நபரை மட்டும் காவல் நிலையத்துக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
காதல் ஜோடிகள் அனைவரையும் கூட்டி வைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பல்வேறு அறிவுரைகளைக் கொடுத்து, இனிமேல் இதுபோல நடந்தால் வீட்டுக்குத் தெரிவிப்போம், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
இனிமேல் கடற்கரையில் இதுபோல அடிக்கடி சோதனை நடத்தப்படும் எனவும், கடற்கரையில் கண்டபடி நடக்க இனிமேல் காதல் ஜோடிகளுக்கு அனுமதி இல்லை என்றும் போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications