'இலங்கை பாதுகாப்பு துறைக்கு ரூ. 92,000 கோடி'!
கிளிநொச்சி:
2008ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கென ரூ. 92,000 கோடிக்கு மேல் இலங்கை அரசு பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த பணம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களைக் கொல்வதற்கே பயன்படும் என்றும் இலங்கை தமிழ் எம்.பி. அரியநேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி அரியநேந்திரன். இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
2008ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பாதுகாப்புக்கென ரூ. 92,000 கோடிக்கு மேல் அரசு பணத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால் இத்தனை பணமும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களைக் கொல்வதற்கே.
வடக்கு, கிழக்கில் வசிக்கும் ஒரு தமிழரைக் கொல்ல தலைக்கு ரூ. 5,140 பணத்தை ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டைவிட பாதுகாப்புக்கென பெருந்தொகையான பணத்தை ஒதுக்கியிருப்பது அரசாங்கம் போரொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
60 வருடங்களுக்கும் மேலாக தமிழர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
அதேபோலத்தான் தற்பொழுது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கென பெருந்தொகையை வரவு செலவுத் திட்டத்தின் பெயரில் ஒதுக்கியுள்ளது.
கிழக்கின் உதயம் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவதும், ராணுவ முகாம்களை அமைப்பதுமே நடந்து வருகிறது.
புத்த மடாதிபதிகள் தொப்பிக்கல மலைப் பகுதிக்குச் சென்று அங்கு புத்த கோவில் ஒன்றை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் போடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்தால், அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது பற்றிச் சிந்திக்க முடியும்.
சமஷ்டி அடிப்படையில், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்துமாயின், அவர்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியும்.
ஆனால் சமஷ்டி தீர்வு யோசனையிலிருந்து பல்டி அடித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடுகிறது.
எந்தவொரு அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசாங்கத்தை உருவாக்கவோ நாங்கள் உதவி செய்யப் போவதில்லை.
எமது கட்சியின் கொள்கைகளுக்கு அமையவே செயல்படுவோம் என்று பேசியுள்ளார் அரியநேந்திரன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications