தலைமை ஆசிரியர் அடித்ததால் மாணவன் தீக்குளித்து தற்கொலை
ஈரோடு: தலைமையாசிரியர் அடித்ததால் பள்ளியில் படிக்கும் மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் உருமாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி என்பவரின் மகன் குமரேசன்(17).
குமரேசன் பெருந்துறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த வகுப்பிற்கு குமரேசன் போகவில்லை. இதனால் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு போன குமரேசனை தலைமையாசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.
தலைமையாசிரியர் கண்டித்ததை சொல்லி உடன்படிக்கும் மாணவர்களும் கேலி செய்துள்ளனர். மாணவர்கள் கேலி செய்ததாலும், பல மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் கண்டித்ததாலும் மனமுடைந்த குமரேசன் அன்று மாலை வீடு திரும்பியதும் மண்ணெண்ணெய் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார்.
மாணவன் தீக்குளித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குமரேசன் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மாணவன் இறந்த செய்தி கேட்டு திரண்ட குமரேசனின் உறவினர்கள், குமரேசன் சாவுக்கு காரணமான தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டுமென்று சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படும் பள்ளி தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் மங்களம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications