கிருத்திகா புகார்- சரவண பவன் ராஜகோபாலிடம் விசாரணை
சென்னை: சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா கொடுத்துள்ள புகாரின் பேரில் சென்னை போலீஸார் ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி வக்கீலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ராஜகோபால்.
சில நாட்களுக்கு முன்பு ராஜகோபால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், வழக்கறிஞர் ராஜேந்திரன், தனது 2வது மனைவி கிருத்திகாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியிருந்தார்.
அடுத்த நாளே கிருத்திகா வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் அவரது கையில் ஏற்பட்டிருந்த காயத்தையும் காட்டினார். இதுகுறித்த உண்மை விரைவில் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த இரு மனுக்களையும் தி.நகர் துணை ஆணையர் லட்சுமியின் விசாரணைக்கு ஆணையர் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து விசாரணைக்கு வருமாறு லட்சுமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரவண பவன் ராஜகோபால், அவரது ஹோட்டல் மேலாளர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.
விசாரணையின்போது கிருத்திகா வக்கீல் ராஜேந்திரனிடம் போய் விட்டதாக ராஜகோபால் கூறியுள்ளார். அவர் செய்த தவறுகளை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன். ராஜேந்திரனை விட்டு பிரிந்து வந்தால் ஏற்கவும் தயாராக இருக்கிறேன். இணைந்து வாழவும் தயாராக இருக்கிறேன்.
ராஜேந்திரன் பேச்சைக் கேட்டு என் மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார் கிருத்திகா என்று கூறியுள்ளார் ராஜகோபால்.
இதைத் தொடர்ந்து கிருத்திகாவும் இன்னும் 2 நாட்களில் விசாரணை நடைபெறவுள்ளது.
தனது 2வது மனைவி வக்கீலுடன் சேர்ந்து கொண்டிருப்பதாக சரவண பவன் ராஜகோபால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications