பரிமளம் தற்கொலை: சோகத்தில் திராவிட கட்சிகள்
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நெருங்கும் வேளையில் அவரது வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் திராவிடக் கட்சிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
திமுகவை தோற்றுவித்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு வழிகோலியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழகத்தில் உள்ள திராவிடப் பாரம்பரிய கட்சிகளும், இயக்கங்களும் அவரது வழித்தோன்றலாகவே தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றன.
அடுத்தாண்டு வரும் அவரது பிறந்தநாள் நூற்றாண்டை வெகு விமரிசையாக நடத்துவது பற்றி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பல முஸ்தீபுகளை செய்து வருகின்றன.
2009ம் ஆண்டு முழுவதும் உலகையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டை அரசு சார்பில் கொண்டாடப் போவதாக பட்ஜெட் அறிக்கையிலேயே ஆளும் திமுக அரசு அறிவித்தது.
"ஆட்சிப் பொறுப்பை இரண்டு ஆண்டுகள் மட்டுமே அண்ணா வகித்தபோதும், ஜனநாயகத்தின் மாட்சிமையை உலகுக்கு உணர்த்துவதாக அவரது நிர்வாகம் இருந்தது. அண்ணாவின் பெருமையை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும்விதமாக இந்த விழாக்கள் நடத்தப்படும்" என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதற்கு சற்றும் குறையாத வகையில், அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டை அதிவிமரிசையாக கொண்டாடப் போவதாக கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்தார்.
இருதரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டு விழா எடுக்க மும்முரம் காட்டும் நிலையில் அண்ணா குடும்பத்தில் இந்த சோக நிகழ்ச்சி நடந்துள்ளது.
அவரது வளர்ப்புமகன் பரிமளம் கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரிமளத்தின் மறைவு இரு பெரும் திராவிட கட்சித் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள இரங்கற்பாவில், 'நம்மை வளர்த்து இன்றைக்கு ஆளாக்கிய அண்ணாவின் மூச்சும், ஆவியும், இதயத்துடிப்பும் என்றும் நம்மிடம் நிலைத்திருக்கும். அவரது பெருமையை பறைசாற்றுவதற்கு பிரம்மாண்டமான விழா எடுக்கவுள்ள நிலையில் பரிமளத்தின் இறப்பு மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை அரசுடைமையாக்கி அதற்கான நிதியை அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் கருணாநிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்தக் குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் தான் இருந்து வருகிறது.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!












Click it and Unblock the Notifications