ஜூலைக்குள் 25,000 கிராமங்களில் பிராட்பேண்ட்: பி.எஸ்.என்.எல்
பெங்களூர்: ஜூலை மாதத்திற்குள் 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.
நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்ஸ் (என்.எஸ்.என்) வழங்கும் புதிய கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது பி.எஸ்.என்.எல்.
என்.எஸ்.என்னின் மல்டிபிளே சொல்யூஷன்ஸ் மூலம் குறைந்த செலவில் அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும். இதன் மூலம் தனியார் சேவையாளர்களின் போட்டியை வெகுவாக குறைக்க முடியும் என பி.எஸ்.என்.எல் கூறுகிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் சமுதாய சேவை மையங்களையும் இணைக்க முடியும். இதுதவிர இ-ஆளுமை சேவையையும் அதிகரிக்க முடியும்.
இதுகுரித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் கூறுகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவை மூலம், ஊரக பிராட்பேண்ட் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த முடியும். கிராமப்புறங்களில் விரைவான இன்டர்நெட் சேவையை ஏற்படுத்த முடியும் என்றார்.
தற்போது இந்தியாவில் 30.4 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. இதில் 10.7 லட்சம் இணைப்புகளை பி.எஸ்.என்.எல். கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications