தேனி வனப்பகுதிகளில் மீண்டும் நக்சல் வேட்டை
பெரியகுளம்: தேனி மாவட்ட வனப் பகுதிகளில் மீண்டும் நக்சலைட் வேட்டையில் அதிரடிப்படை போலீஸார் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், நடத்திய வேட்டையில், வேல்முருகன், பழனிவேல், முத்து செல்வம் ஆகிய 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர்.
தப்பி ஓடிய மற்ற சுந்தரமூர்த்தி உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனி வனப்பகுதிகளை நக்சலைட் முகாமாக மாற்ற நடந்து வரும் முயற்சிகள் தெரிய வந்தன.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாத கும்பலை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத் தனர். அப்போது அந்த தீவிரவாதிகள் எதிர்தாக்கு தல் நடத்தினர். இதையடுத்து போலீசாருக்கும், தீவிர வாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கர ஆயுதங் களுடன் 5 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தேனி வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளை முழுமையாக ஒடுக்கும் வகையில் அதிரடிப்படை சிறப்பு முகாம் பெரியகுளம் அருகே கும்பக்கரை, கொடைக்கானல், பெரியகுளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது.
இங்குள்ள அதிரடிப்படை வீரர்கள், தேனி மாவட்ட போலீஸார் அவ்வப்போது வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் இந்த முகாம்களில் இருந்த அதிரடிப்படை வீரர்கள், மீண்டும் சத்தியமங்கலம் சென்று விட்டனர். ஒரு சிலரே தேனி முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பெரியகுளம் மலைப்பகுதி யில் மீண்டும் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேனி மாவட்ட எஸ்.பி. சுதாகர், மதுரை ஊரக மாவட்ட எஸ்.பி. அன்பு ஆகியோர் விரைந்தனர்.
அதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறப்பு முகாம்கள் காலி செய்யப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் மீண்டும் பெரியகுளம் மலைப்பகுதிக்குள் துணிச்சலுடன் ஊடுருவி இருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
இதையடுத்து இப்பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications