உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியா காரணம்: புஷ்
வாஷிங்டன்: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் பேசுகையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம். இரு நாடுகளில் உள்ள மக்களும் அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். சத்தான உணவு வகைகளை அவர்கள் அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். இதனால்தான் உணவு தானியங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரைஸின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் புஷ்ஷும் இதே கருத்தைக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மிசெளரியில் அதிபர் புஷ் பேசுகையில், இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இப்போது சத்தான உணவு வகைகளையே அதிகம் விரும்புகின்றனர். இது அமெரிக்காவை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.
இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் தேவை அதிகம் என்பது, அமெரிக்காவின் தேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். தேவை அதிகரிப்பதால் விலைவாசியும் உயருகிறது. உணவுக்கு நெருக்கடியும் ஏற்படுகிறது.
வளரும் நாடுகளில் பொருளாதாரம் மட்டுமல்லாது பிற துறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. இது நல்லதுதான். வளர்ந்த நாடுகளுக்கும் இது நல்லதுதான், காரணம் நாம் நமது பொருட்களை அதிக அளவில் விற்க முடியும் என்பதால் என்று கூறியுள்ளார் புஷ்.
இந்திய மக்கள் சத்தான உணவு சாப்பிடுவதால் அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புஷ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications