சாராய வியாபாரி ஊருக்குள் நுழைய கோர்ட் தடை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சாராய வியாபாரி ஊருக்குள் நுழைய நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பழனியப்பன் (30).
இவர் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் சிறைவாசம் அனுபவித்தவர்.
போலீசார் பல முறை அறிவுரை கூறியும், பழனியப்பன் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை எஸ்பி மூர்த்தி உத்தரவின் பேரில் கந்தவர்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் பழனியப்பன் புகார் மீது மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த புதுக்கோட்டை நீதிபதி, பழனியப்பன் கந்தர்வகோட்டைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications