நெல்லையில் போலீஸ் ரெய்டில் சிக்கிய மாணவிகள்
நெல்லை: நெல்லையில் ஒரு வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையின்போது உல்லாசமாக இருந்த 2 கல்லூரி மாணவிகள் சிக்கினர். அவர்களுடன் இருந்த நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
சுதந்திர தினத்தன்று நெல்லை கலெக்டர் அலுவலகம், பாளை வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து லாட்ஜ் மற்றும் சந்தேகப்படும்படியான இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு நெல்லை சட்டக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவர், பாளையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடனும், தியேட்டர் ஊழியர் ஒருவர் 10ம் வகுப்பு மாணவியுடனும் உல்லாசமாக இருப்பதை கண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் பாளை. அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications