சென்னை கடல் பல்கலை. மசோதா நிறைவேறியது
டெல்லி: சென்னையில் அமைக்கப்படவுள்ள கடல் சார் பல்கலைக்கழக சட்ட மசோதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவில் அமைக்க வேண்டும் என அது கோரி வருகிறது. ஏற்கனவே அங்குள்ள மிரி கடல் சார் மையத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து தர வேண்டும் என அது கோரி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி கடல் சார் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கடல் சார் பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைக்க கூடாது, கோல்கட்டாவில் ஏற்கனவே உள்ள மிரி கடல்சார் மையத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து தர வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு பேசுகையில், கடல்சார் பல்கலைக் கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் அமைந்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இந்த பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைக்க காரணம், உத்தண்டியில் 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளித்துள்ளதுதான் என்றார்.
பின்னர் ஒரு வழியாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில், மும்பை மற்றும் கோல்கட்டாவில் நிலம் கிடைக்காததால், அங்கு பல்கலைக் கழகத்தை அமைக்க முடியவில்லை. இந்த மசோதா மீது லோக்சபாவில் நடந்த விவாதத்தில், சென்னையில் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர் சமிக் லகரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மசோதாவை அறிமுகப் படுத்தியபோது, அதனை பிடுங்கி கிழித்துப் போட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள காங்., உறுப்பினர் தாமஸ் கடல்சார் பல்கலைக் கழகத்தை கொச்சியில் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் அமையவுள்ளதற்கு பா.ம.க., தலைவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா அடுத்த இரண்டு தினங்களில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அடுத்த ஓராண்டில் சென்னையில் இதற்கான பணிகள் தொடங்கும்.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடல்சார் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், சென்னையில் அமையவுள்ள பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும்.
சென்னையில் அமையவுள்ள கடல்சார் பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசு ரூ.300 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2,000 மாணவர்களுக்கு, இந்த பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்கும் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications