உ.பி. பத்திரி்க்கையாளர் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல்

மும்பையில் உள்ள நிர்பய் பத்ரிக் என்ற இதழில் பணியாற்றி வருபவர் பத்திரிக்கையாளர் தினாநாத் திவாரி (40). இவர் மலட் அருகே உள்ள குரார் கிராமத்தில், வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்துவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றார்.
அப்போது அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் 15க்கும் மேற்பட்ட ராஜ் தாக்கரே கட்சியினர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் திவாரி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை பகவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. காதிலும் பலத்த காயம் ஏற்பட்டு்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், இருப்பினும் அவர் படுகாயமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உ.பி. மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் திவாரி. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார்.
தாக்குதல் தொடர்பாக உள்ளூர் கவுன்சிலர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை உ.பியைச்சேர்ந்த ராம் நாராயணன் ராய் என்வர் புறநகர் ரயிலில் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த ராகுல்ராஜ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் ஓடும் ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்தேவ் ராய் என்ற கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் உ.பியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டிருப்பது வட இந்தியர்களிடையே மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.
ரயில்களை நிறுத்துவேன்-லாலு எச்சரிக்கை:
பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் ரயில் சேவையை நிறுத்த தயங்க மாட்டோம் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மகாராஷ்டிரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ஓடும் ரயிலில் உத்தரபிரதேச வாலிபர் தரம்தேவ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகக் கடுமையான குற்றம், இது ஒரு தேசிய பிரச்சனை. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறும் மாநிலங்களில் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு தயங்க மாட்டேன்.
தரம்தேவ் மனைவிக்கு ரயில்வேயில் வேலை:
கொல்லப்பட்ட தரம்தேவின் மனைவிக்கு ரயில்வேயில் வேலையும், ரூ.3 லட்சம் நஷ்டஈடும் வழங்கப்படும் என்றார் லாலு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications