துப்பாக்கி முனையில் 150 பவுன் நகை கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கோபி செட்டிபாளையத்தில் டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில்150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், போபிசெட்டிபாளையம் அருகே உள்ளது நம்பியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் டாக்டர் தனசேகரன்.
இவர் வீட்டில் தனியே இருந்தார். இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் பீரோவை சிலர் உடைப்பதை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அந்த கும்பல் டாக்டரை தாக்கியதோடு துப்பாக்கி முனையில் அவரை கட்டிப் போட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த 150 பவுன் நகைகளையும், ரூ.72,000 பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications