அமைச்சர்கள், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் கசப்படைந்துள்ளது.
செளத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திற்கு விரைந்த பிரதமர் மன் மோகன் சிங் அங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் உளவுப்பிரிவு தலைவர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடற்படைக்கு புதுக் கப்பல்கள், ரேடார்கள்:
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி நடத்திய மற்றொரு ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள், ரோந்துக் கப்பல்கள், அதி நவீன கண்காணிப்பு ரேடார்களை வாங்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் வகையில், புதிய கடலோரக் காவல் படை நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் நடந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோரக் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அதி நவீன சாதனங்கள் வாங்கப்படவுள்ளன.
எதிரிகளின் கப்பல்கள் மற்றும் படகுகளை தடுத்து நிறுத்தி தாக்கும் அதி விரைவு தாக்குதல் படகுகள் உள்ளிட்டவை உடனடியாக வாங்கப்படவுள்ளன.
உலக சந்தையிலிருந்து 70 சிறிய மற்றும் பெரிய ரக கப்பல்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை கடலோரக் காவல் படையிடம் வழங்கப்படும்.
தற்போது உள்ள 13 கடலோரக் காவல் படை நிலையங்கள் தவிர கூடுதலாக 9 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங், கடலோரக் காவல் படை இயக்குநர் அனில் சோப்ரா, இயக்குநர் (கொள்முதல்) சசி காந்த் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications