திருமங்கலம்-நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது
திருமங்கலம்: வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருமங்கலம் தொகுதியி் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
கடந்த 15ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, அஇசமக உள்பட 26 பேர் வேட்பாளர்கள் உள்ளனர்.
கடந்த 2 வாரமாக இங்கு மிகத் தீவிரமாக பிரச்சாரம் நடந்து வந்தது. திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதல்வர் கருணாநிதி நேற்று பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அழகிரி தலைமையில் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரமாக இங்கேயே தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக ஜெயலலிதா கடந்த 3 நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலை திருமங்கலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் திருமங்கலத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்காக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனுக்காக கட்சி தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகா ஆகியோரும் தொகுதி முழுவதும் சுற்றி வருகின்றனர்.
திமுக, அதிமுக வேட்பாளர்களின் பண, படை பலத்தில் தேமுதிக, அஇசமக வேட்பாளர்களைத் தவிர சுயேச்சைகள் யாரும் வெளியிலேயே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் நாளை (7ம் தேதி) மாலை 5 மணியுடன் இந்தத் தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் இன்று உச்சக்கட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி முழுவதும் 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக துணை ராணுவம் வந்திறங்கியுள்ளது.
மின்னணு எந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடிகள்-தோரணங்கள் அகற்றம்:
பிரச்சாரம் ஓய்வதையடுத்து அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், பேனர்கள், கட்-அவுட்டுகள், விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
திருமங்கலம் எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications