9 வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்காந்த்-தேமுதிக தனித்துப் போட்டி?
சென்னை: மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
நிறைந்த அமாவாசை தினமான இன்று ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இன்று தனது கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் 9 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒருவர் பெண் ஆவர். அந்த வேட்பாளர்கள் விவரம்:

திண்டுக்கல்-ப. முத்து வேல்ராஜ்
கன்னியாகுமரி- எஸ். ஆஸ்டின்
நெல்லை- எஸ். மைக்கேல் ராயப்பன்
விருதுநகர்- க. பாண்டியராஜன்
சேலம்- அழகபுரம் மோகன்ராஜ்
திருச்சி- ஏ.எம்.ஜி. விஜயகுமார்
மதுரை- ஆர்.எம். முத்துலட்சுமி
தேனி- எம்.சி. சந்தனம்
நாமக்கல்-என். மகேஷ்வரன்
பட்டியலை வெளியிட்ட பின் விஜயகாந்த் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் சென்று இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்கினார்.
ஏற்கனவே காஞ்சிபுரத்தில் அவர் பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தாலும் நிறைந்த அமாவாசை தினமான இன்று தான் கன்னியாகுமரியில் அவரது பிரச்சாரப் பயணம் முறைப்படி தொடங்கியது.
இதுவரை கூட்டணியா, இல்லையா என்பது குறித்து அவருக்கு மட்டுமே விளங்கும் வகையில் பேசி வந்தார் விஜய்காந்த். இந் நிலையில் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக அவர் வேட்பாளர் நேர்காணலை அவர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு...
இதற்கிடையே திமுக கூட்டணிக்கு வராவிட்டாலும் குறைந்தபட்சம் தனக்கு மட்டுமாவது விஜயகாந்த் ஆதரவு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.
திமுக அணியில் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், மட்டும் போட்டியிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நான் அடையாளம் காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று பூடகமாக பேசி வைத்துள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக நிற்காத தொகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை அடையாளம் காட்டக் கூடும் எனத் தெரிகிறது.
இன்று களியக்காவிளை அருகே பிரசாரத்தை தொடங்கிய விஜய்காந்த் குமரி தேமுதிக வேட்பாளர் ஆஸ்டினுக்கு ஆதரவு திரட்டினார்.
தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டும் விஜய்காந்த்
நாளை நாகர்கோவில் புத்தேரியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். இறச்சக்குளம், துவரங்காடு பகுதிகளில் ஆதரவு திரட்டும் அவர் ஆரல்வாய்மொழி வழியாக நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
மற்ற கட்சிகள் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்த் தான் முதல் ஆளாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications