யுகேஜி மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியை

மணப்பாறை காமராஜ் நகரை சேர்ந்த பழனிச்சாமி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது 6 வயது மகள் ரோகிணி. இச் சிறுமி திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள்.
கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற ரோகிணியை அழைத்து வர பழனிச்சாமி சென்றபோது அவள் பள்ளியில் இல்லை. பல இடங்களில் தேடியும் ரோகிணி கிடைக்கவில்லை.
ரோகிணி அன்றைய தினம் பள்ளிக்கே வரவில்லை. அவளை பற்றி எதுவும் தெரியாது என்று பள்ளி தரப்பில் மறுத்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகிணியை தேடி வந்தனர்.
இந் நிலையில் மறுநாள் ரோகிணி பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தாள்.
பிரேத பரிசோதனையில் ரோகிணி தண்ணீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும் தலையில் அடிபட்டு இறந்திருப்பதும், இறந்த பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் ரோகிணியை அவளது வகுப்பு ஆசிரியை ஜெயராகினியே (25) அடித்து கொன்றது தெரியவந்தது.
கொலை நடந்த அன்று வகுப்பில் ரோகிணி மற்ற மாணவிகளிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து அவளை கண்டிக்க ஆசிரியை ஜெயராகினி ரோகிணியை முரட்டுதனமாக அடித்துள்ளார்.
ஆசிரியையின் அடியில் ரோகிணி மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்தும் போனாள்.
இதையடுத்து மற்ற மாணவிகளை அவசரமாக வெளியேற்றிவிட்டு பள்ளியில் வேலை பார்க்கும் எழுத்தர் ஆரோக்கியராஜ், அலுவலக உதவியாளர் சகாயராஜ் ஆகியோரிடம் விவரத்தை கூறியுள்ளார் ஜெயராகினி.
மாணவி மரணமடைந்த தகவல் வெளியானால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் கொலையை மறைக்க திட்டமிட்டனர். பள்ளி முடிந்து அனைவரும் சென்ற பிறகு மூவரும் சேர்ந்து ரோகிணியின் பிணத்தை தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
விசாரணையி்ல் இந்த விவரம் தெரியவந்ததையடுத்து ஆசிரியை ஜெயராகினியை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியராஜ் (39), சகாயராஜ் (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெயராகினி இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகிறதாம்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications