'ஈழம்': 100 ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் -கிருஷ்ணசாமி
தென்காசி: இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 100 ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெள்ளபாண்டி, கிராம பஞ். தலைவராகவும், ராமலிங்கபுரத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது சட்ட விரோதமானது.
அவர் மீதான அரசின் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது பதவிகளை அவர் ராஜினமா செய்ய முடியாது. ஆனால் அவர் தனது பதவிகளை ராஜினமா செய்ததாக கடிதம் கொடுத்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அடிப்படையில் தவறு செய்பவர் 11 லட்சம் மக்களின் பிரதிநிதியாக எப்படி இருக்கமுடியும், அவரை வேட்பாளராக நிறுத்தியதே தவறு.
தேர்தலில் யார், யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். அந்த வகையி்ல் சமூக நல்லிகணக்கத்தோடு சரத்குமார், கார்த்தக் ஆகியோர் தென்காசியில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தெரிவித்து அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை.
சரத் பிரச்சாரத்துக்கு வருவார்...
இதே போல சமூக ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு சமக, நாமக போட்டியிடும் தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் ஆதரவு கொடுப்பது குறித்து நாளை முடிவு அறிவி்ப்போம்.
மேலும் சரத்குமார், கார்த்திக் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் தென்காசி தொகுதியில் எனக்கு பிரச்சாரம் செய்ய அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
தென்தமிழகத்தில் தொழில் வளம் பெருகிடவும், ஜாதி, மத மோதலுக்கு நிரந்தரமாக முற்று புள்ளி வைக்கும் விதமாகவும் அனைத்து தரப்பனரிடமும் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறேன். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே ஆதரவு தந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
இதையடுத்து இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் உயிரை பாதுகாக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 100 ரயில் நிலையங்கள் முன்பு இலங்கை அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடக்கிறது. தென்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது என்றார் கிருஷ்ணசாமி.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications