20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: டைம்ஸ்

இலங்கையில் நடந்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் குறித்த உண்மைகளை டைம்ஸ் இதழ் படிப்படியாக வெளியிட்டு இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதி என அறிவிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி மக்களை ராணுவம் மிகக் கொடூரமாக தாக்கி கொன்றதாகவும், இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது டைம்ஸ்.
இந்த கொடூர படுகொலை குறித்து பான் கி மூனுக்கும், விஜய் நம்பியாருக்கும் தெரியும் எனவும் அது இப்போது பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த படுகொலை குறித்து அரசல் புரசலாக மீடியாக்களில் செய்தி வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விஜய் நம்பியாருக்கு இந்தத் தகவலை இலங்கை அரசு தெரிவித்ததாம்.
பான் கி மூன் கொழும்பு வருவதற்கு முன்பே விஜய் நம்பியார் கொழும்புக்கு வந்திருந்தார். அப்போதுதான் இந்தப் படுகொலை குறித்த தகவலை இலங்கைத் தரப்பு நம்பியாருக்குத் தெரிவித்ததாம்.
தனக்குக் கிடைத்த தகவலை பான் கி மூனுக்கு விஜய் நம்பியாரும் தெரிவித்துள்ளார். ஆனால் கொழும்பு வந்திருந்த பான் கி மூன் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. மாறாக தான் இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடந்திருப்பதாக மட்டும் கூறி விட்டு போய் விட்டார்.
நம்பியாருக்கும், பான் கி மூனுக்கும், அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட தகவல் தெரிந்தும் அதை வெளிப்படுத்தாமல் கமுக்கமாக மறைத்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications