500 ரூபாய்க்கு மாணவர்களுக்கு லேப்டாப் - அமைச்சரின் கனவு

ஹைதராபாத்தில் நடந்த இ-2009 என்ற நிகழ்ச்சியில், புரந்தரேஸ்வரி பேசுகையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 500 ரூபாய்க்கு லேப்டாப் என்பது சவாலான ஒன்றுதான். ஆனால் நம்மிடம் திறமை உள்ளது. சவாலை சந்தித்து வெல்லும் திறமை உள்ளது. ரத்தன் டாடா ரூ. 1 லட்சத்திற்கு காரை உருவாக்குவார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
நாம் அனைவரும் இணைந்து குறைந்த விலையிலான லேப்டாப்களை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். கம்ப்யூட்டர் இருந்தால் கரன்ட் இருப்பதில்லை. அது ஒரு பிரச்சினை. அதையும் சரி செய்ய வேண்டும்.
நம்முடைய மாணவ, மாணவியருக்கு இவ்வளவு குறைந்த விலையில் லேப்டாப்கள் கிடைத்தால், கல்வித் தரம் மேலும் உயரும். தொழில்நுட்பத்தை நமது குழந்தைகளுக்கு வெகு அருகில் கொண்டு வந்து விடலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் லேப்டாப் தர வேண்டும் என சிலர் சொல்கின்றனர். ஆனால் அப்படி செய்வதாக இருந்தால், ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் குறைந்தது 5000 முதல் 10,000 வரை மானியமாக செலவிட நேரிடும். ஆனால் தற்போதைய நிலையில் அவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது இயலாத காரியம்.
அதேபோல அவரவர் தாய் மொழியில் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்த வேண்டும். அது இன்னொரு சவால்.
ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். தொழில்நுட்பத்தைக் கண்டு அவர்கள் அஞ்சக் கூடாது. நம்மிடம் உள்ள இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வகுப்பறையில் கம்ப்யூட்டர்கள் முன்பு அமரவே அவர்கள் தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். எங்கே தொழில்நுட்பம் நமது வேலையைப் பறித்து விடுமோ என அஞ்சுகிறார்கள். அது தேவையில்லை. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பணியை நாம்தான் செய்ய வேண்டும் என்றார் புரந்தரேஸ்வரி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications