பிரபாகரன் இருந்தால் சிக்கல் தான்-இலங்கை ராணுவ தளபதி!
கொழும்பு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் தப்பியிருந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த கடைசிக்கட்ட போரில் ஒரு சில நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 3 லட்சம் தமிழர்கள் வன்னி பகுதியில் வன்கொடுமை முகாமில் சிக்கி தவிக்கின்றனர்.
இவர்களை விரைவில் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்ப இருப்பதாக கூறிய இலங்கை தற்போது அவர்களுடன் சிங்களர்களையும் குடியமர்த்த போவதாக கூறுகிறது.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறுகையில்,
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தப்பியிருந்தால் இலங்கையி்ன் எதிர்காலம் சிக்கலானதாக அமைந்திருக்கும். இதை பற்றி யாருமே கேட்டு அறிய தேவையில்லை.
விடுதலை புலிகளின் படை, ஆயுதம் மற்றும் தளவாடங்களை 60வது ஆண்டு கொண்டாட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இது நமது வீரர்களின் திறமையை மட்டுமல்ல. தீவிரவாதத்தை தடுக்காவிட்டால் நாடு எப்படி போயிருக்கும் என்பைத உணர வைப்பதாகவும் இருக்கிறது. தீவிரவாதத்தால் தான் இலங்கையில் ரத்தம் சிந்திவிட்டது.
தற்போது எங்களுடை முக்கிய வேலை இடங்களை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்துவது தான். அமைதியான வாழக்கை நடந்த பொறுப்பான முறையில் கடுமையாக போராடுவோம்.
தீவிரவாதம் பல நாடுகளுக்கு அச்சம் தரும் வேலையில் அவற்றை அழித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். அதிபர் ராஜபக்சேவின் துணிச்சலான தலைமை தான் இந்த வெற்றியை தேடி தந்தது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications