2010-11ல் விவசாயிகளுக்கு ரூ. 2500 கோடிக்கு பயிர்க்கடன்

நிதியமைச்சர் அன்பழகன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகள் விவரம்:
- கூடுதலாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் ஏரிகள் புனரமைப்பு
- விவசாயிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
- முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை
- உணவு மானியத்திற்கு ரூ. 3750 கோடி ஒதுக்கீடு.
- நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு
- காவிரியில் கதவணை அமைக்க ரூ. 193 கோடி ஒதுக்கீடு
- நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 200 கோடி
- தாமிரபரணி, நம்பியாறு ஆறுகள் இணைப்புக்கு ரூ. 126 கோடி
- பரம்பிக்குளம், ஆழியாறு கால்வாயை சீராக்க ரூ. 127 கோடி
- ரூ. 439 கோடியில் ஏரிகள், குளங்கள் புனரமைப்புத் திட்டம்.
- ரூ. 609 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு உதவ ரூ. 10 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு.
- கூடுதலாக 10 ஆயிரம் விவசாய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின் வாரியத்திற்கு ரூ. 295 கோடி மானியம்.
- 2010-11ல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 140 கோடி
- கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 1650 மற்றும் அரவைக் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 2000 ஆக வழங்கப்படும்.
- செம்மை நெல் சாகுபடித் திட்டம் 6.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.
- சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 வழங்கப்படும்
- சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் 77,000 ஏக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்படும்.
- விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 891 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
- இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி பயி்ர் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றுப் படுகைகளில் தேக்கு மரம் வளர்க்கும் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications