'பாரத் பந்த்': சென்னையில் பஸ்கள் ஓடும்-போலீஸ் கமிஷ்னர்
சென்னை: வரும் 5ம் தேதி அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தின் போது கடைகளை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து 5ம் தேதி எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தம் தொடர்பாக உள்துறை செயலாளர் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இதைத் தொடர்ந்து பொது வேலை நிறுத்தத்தின் போது காவல் துறை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அன்றைய தினம் சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும். காலையில் பஸ் டிப்போக்களிலிருந்து பஸ்களை எடுக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதை எதிர்கொள்ளும் வகையில் பஸ் டிப்போக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
பஸ்கள் இயக்கப்படுவதை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெறவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினாலோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை பொது வேலைநிறுத்தம் தொடர்பாக முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைப்பட்டால் கைதுகள் இருக்கும்.
இந்த ஆண்டு இதுவரை 384 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைப் பறிப்பு வழக்குகளில் 12 பேரை பிடித்துள்ளோம்.
வீட்டு வேலைகளுக்கு பணிப் பெண்களை நியமிக்கும்போது அறிமுகம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.
வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வாங்கித் தருவதாக கூறியும் உதவிகள் செய்வதாக கூறியும் தற்போது பணம் பறிப்புகள் நடந்து வருகின்றன. எனவே முதியோர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
முதியோர் யாராவது இது போன்று ஏமாற்றப்பட்டிருந்தால் அது குறித்து 9840983832 என்ற தொலைபேசி எண் மூலமாக காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். 9500099100 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சென்னையில் இதுவரை வழிப்பாட்டு தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாங்கள், வங்கிகள் உள்ளிட்ட 2,434 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எல்லா வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு வங்கிகளை காவல்துறை உத்தரவிட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications