தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட்-பங்காரு அடிகளாரிடம் விசாரணை

மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்பழகன் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.
ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பங்காரு அடிகளாரின் மூத்த மகள் ஆவார். இவரும் மேல்மருவத்தூரில் தான் வசிக்கிறார்.
அதே போல நாகர்கோவில் சன் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இந்தக் கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அதேபோல கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. கல்லூரி, தாம்பரம் சாய்ராம், மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை கற்பகாம்பாள் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை நடக்கிறது.
இந்த சோதனைகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. வருமான வரித்துறையினரின் சோதனைகள் இரவு வரையும் தொடர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications