மரணத்தை வென்று மீண்டுள்ளேன்-காஸ்ட்ரோ உற்சாகப் பேட்டி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது பிழைப்பேனோ, மாட்டேனோ என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்று மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது,
எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது பிழைப்பேனா,இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை காப்பாற்ற முடியாது என்று கைவிட்டுவிடுவார்களா என்றெல்லாம் எனக்குள் நான் எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் நான் குணமடைந்து விட்டேன்.
உடல்நிலை சற்றுத் தேறியவுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல்நலக் குறைவால் எனது கால்களும், கைகளும் வழுவிழந்து இருந்தன. இதனால் எனது கால்களையும், கைகளையும் பழையபடி கொண்டுவர முயற்சித்தேன்.
எழுந்து நிற்கவே படாதபாடு பட்டேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் நடக்க ஆரம்பித்தேன். எழுதி எழுதி கைகளை சரிசெய்தேன். என் உடலையும், உள்ளத்தையும் மீணடும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டேன். இதனால் தான் என்னால் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.
உடல் நலம் பாதிக்கப்பட்டபோது உடல் எடை வெகுவாகக் குறைந்தது. தற்போது உடல் எடை அதிகரித்து 85 கிலோவாக உள்ளது. எனினும் உணவு, மருந்து உட்கொள்வதில் மருத்துவர் ஆலோசனையை தவறாது கடைப்பிடிக்கிறேன்.
எனது உடல்நிலை குறித்து எனக்குள் எழுந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு தற்போது எனக்கு மருத்துவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் நான் பட்டம் பெறாத மருத்துவராகி விட்டேன் என்று அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார் என்று அவரைப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக ஆண்டவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ, மரண வாயிலைத் தொட்டுத் திரும்பினார்.
காஸ்ட்ரோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரை உயிராய் நேசிக்கும் கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவரின் உடல்நிலை படிப்படியாகத் தேறியது.
இனியும் தன்னால் அதிபர் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்த அவர் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஒப்படைத்தார். தற்போது அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications