கோலார் தங்கச் சுரங்கத்தில் 30 லட்சம் டன் தங்கம்-மீண்டும் செயல்படும் வாய்ப்பு அதிகரிப்பு

உலகிலேயே மிகவும் ஆழமான 2வது தங்கச் சுரங்கம் கோலார் தங்கச் சுரங்கம். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இது உள்ளது. கடந்த 121 ஆண்டுகளாக இது செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்திலிருந்து தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் தமிழர்கள் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர். முழுக்க முழுக்க தமிழர்களே இங்கு தங்கத்தை வெட்டியெடுத்து வந்தனர். கடந்த 2001ம் ஆண்டு இந்த சுரங்கம் நலிவடைந்து விட்டதாக கூறி மூடி விட்டனர்.
இந்த நிலையில் 30 லட்சம் டன் தங்கம் இன்னும் அங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் 15 ஆண்டுகளுக்கு இங்குதங்கம் தோண்டியெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலார் தங்கச் சுரங்கத்திற்கு மீண்டும் புதுவாழ்வு கிடைக்கவுள்ளது.
கடந்த 1994, 97 மற்றும் 2000மாவது ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இதுதொடர்பான ஆய்வை முடித்து தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. அதில், 30 லட்சம் டன் தங்க படிவுகள் இன்னும் தோண்டியெடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த சுரங்கத்தை மீண்டும் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து பாரத் கோல்ட்மைன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் சுரங்கப் பிரிவு மேலாளர் ஆனந்தராஜ் இதுகுறித்துக் கூறுகையில், இன்னும் ஏராளமான தங்கப் படிவுகள் உள்ளன. ஆனால் சுரங்கத்தைப் புதுப்பிக்கும் பணிகளை தொடங்க அரசு காலதாமதம் செய்து வருகிறது என்றார்.
இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளரும், கோலார் தங்கச் சுரங்க ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான திவாகரன் கூறுகையில், பல குழுக்கள் சுரங்கத்திற்கு உயிரூட்டும் முயற்சிகள் தொடர்பாக ஆரம்பிக்கபப்ட்டன. இதுகுறித்த அறிக்கைகளும் கூட சுரங்கத்தை தொடர்ந்து செயல்படுத்த பரி்ந்துரைத்துள்ளன.ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது என்றார்.
2005ல் அமைக்கப்பட்ட பி.சி. குப்தா கமிட்டி சுரங்கத்தில் 13.72 லட்சம் டன் தங்கப் படிவுகள் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அறிக்கைகள் மூலம் கோலார் தங்கச் சுரங்கம் மீண்டும் மின்னும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சுரங்கப் பகுதியில் வைத்துதான் தனுஷ்,சாயாசிங் நடித்த திருடா திருடி படத்தில் வரும் மன்மத ராசா பாடல் காட்சியைப் படமாக்கினர் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications