பாக்.குக்கு கூடுதலாக 2 அணு உலைகளை வழங்கும் சீனா-இந்தியா கவலை
டெல்லி: பாகிஸ்தானுக்கு கூடுதலாக 2 அணு உலைகளை அமைத்துக் கொடுக்க சீனா முன்வந்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இது கவலை தரும் விஷயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சஸ்மா பகுதியில் ஏற்கனவே இரண்டு அணு உலைகளை பாகிஸ்தான் கட்டியுள்ளது. இதற்கு சீனாதான் முழு உதவிகளையும் செய்தது. தற்போது மேலும் 2 அணு உலைகளை கட்டிக் கொடுக்கவும், தேவையான பொருட்களை வழங்கவும் சீனா முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமைக்குத் தெரிவித்து விட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இவை மின் நிலையங்கள் என்று பாகிஸ்தானும், சீனாவும் கூறினாலும் கூட இந்தியா வேறு கண்ணோட்டத்தில்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் குறித்தும், இதுதொடர்பாக சீன, பாகிஸ்தானிய செயல்பாடுகளையும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு நிச்சயம் கவலை தரும் அம்சம் இது என்பதில் சந்தேகமில்லை என்றார்.
தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது பாகிஸ்தான். இந்த நிலையில் கூடுதலாக அணு உலைகளை கட்டினால் அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தீவிரவாதிகள் கைக்கு அணு உலைகளும், ஆயுதங்களும் சென்றால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாகி விடும். எனவேதான் பாகிஸ்தானின் கூடுதல் அணு உலைகளை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஆனால் இந்தியாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு உதவ சீனா முடிவு செய்து விட்டது.
பாகிஸ்தான்-சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து அணு சப்ளை குழுமத்தில் உள்ள தனது தோழமை நாடுகளுடன் இந்தியா பேசத் தொடங்கியுள்ளது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற தனது நட்பு நாடுகளிடமும் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications