ஸ்பெக்ட்ரம்: ராசாவின் சென்னை-டெல்லி-பெரம்பலூர் வீடுகளில் சிபிஐ சோதனை: உறவினர் வீடுகளிலும்!

அதே போல தொலைத் தொடர்புத்துறையின் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்ட் நடத்தியது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை என்று சிபிஐ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மோதிலால் நேரு மார்க்கில் ராசாவின் வீட்டிலும், சென்னை வீட்டிலும், நீலகிரி வீட்டிலும் மற்றும் சென்னை ஆர்.ஏ.புரம், ஆல்வார்பேட், நந்தனம், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.
அதே போல பெரம்பலூர் சத்திரைமனைவேலூரில் உள்ள ராசாவின் வீடு, பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா கமலாவின் வீடு, லாடபுரத்தில் உள்ள ராசாவுடைய மாமியாரின் வீடு, பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில் உள்ள அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும்,
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ராசாவின் அப்பா பெயரில் இயங்கும் ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை அலுவலகம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதே போல ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, தொலைத் தொடர்புத்துறையின் உறுப்பினரான ஸ்ரீதரா, துணை இயக்குநர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா ஆகியோரின் டெல்லி வீடுகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.
டெல்லி, சென்னை, பெரம்பலூர் உள்பட மொத்தம் 14க்கும் அதிகமான இடங்களில் இன்று காலை 7 மணிக்கு இந்தச் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின. பிற்பகலில் சோதனைகள் முடிவடைந்தன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராசாவை இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காமல் இருப்பது ஏன் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐயை கடுமையாக சாடியிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் இந்த ரெய்டுகள் நடந்துள்ளன.
2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவியேற்றவர் பஹுரா. அவரது வீட்டை சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ராஜாவின் முதன்மைச் செயலாளராக இருந்து வந்த சந்தோலியாவை அமலாக்கப் பிரவு அதிகாரிகள் துருவித் துருவி சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ விசாரணைக்குட்பட்டுள்ளார்.
சோதனைக்குள்ளாகியுள்ள ஸ்ரீவத்சவா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கும் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். இதனால் அவரும் விசாரணைக்குள்ளாகியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 2ஜி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதன் பின்னர் இப்போதுதான் அது ராஜாவை நெருங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications