For Daily Alerts
Just In
காவல் நிலையத்தையே 'விற்ற' தந்தை-மகன் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காவல் நிலைய இடத்தை பட்டா போட்டு விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் வசிப்பவர் ராமசாமி. இவரது மகன் மூர்த்தி. இவர்கள் இருவரும் எரியோட்டில் சுமார் 216 ஏக்கர் நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
இதில், காவல் நிலையம், வீடுகள் அடங்கிய நிலத்தை தேனியை சேர்ந்த சரவணன் வாங்கியுள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.
இதனையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எரியோட்டு ராமசாமி, அவரது மகன் மூர்த்தியை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், மோசடியில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments
English summary
Two persons arrested for selling Police station near Dindigul. The duo Ramasamy and Murthy, forged documents for 216 acre land including police station and sold to many persons. Dindigul CCB police arrested the fraudsters on receiving a complaint from one Saravanan.
Story first published: Wednesday, December 8, 2010, 16:57 [IST]